/

பிகாரில் கரோனா பாதிப்பு 1,24,827 ஆக உயர்வு

பிகாரில் மேலும் 1,444 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
With 1444 new cases COVID 19 tally reaches to 124827 in Bihar
Updated On :27 ஜனவரி 2024, 5:11 pm

UNI

பிகாரில் மேலும் 1,444 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பிகாரில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, புதிதாக 1,444 பேர் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,24,827 ஆக அதிகரித்துள்ளது.

பாட்னாவில் மேலும் 262 பேரை தொடர்ந்து மொத்தம் 19,366 பேரும், கிஷன்கஞ்ச் 85, முசாபர்பூர் 80, அராரியா 76, மேற்கு சம்பரன் 71, மதுபானி 64, பாகல்பூர் 54, கயா 47, சீதாமரி 21, போஜ்பூர் 20, நவாடா 15, பக்சர், ஷியோஹர் மற்றும் ஜெஹனாபாத் தலா 14, ஷெய்க்புரா 12, சிவான் 11, ககாரியா 10, கைமூர் 9, பாங்கா 7, ஜமுய் 6, முங்கர் 5 மற்றும் அர்வால் 4 பேரும் பாதிக்கக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.