/

புதுச்சேரி ஜிப்மரில் கரோனா நோயாளி தற்கொலை முயற்சி

புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், அங்குப் பதற்றம் நிலவியது. 

News image
COVID patient attempts to commit suicide at Jipmer
Updated On :27 ஜனவரி 2024, 5:11 pm

UNI

புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், அங்குப் பதற்றம் நிலவியது. 

புதுச்சேரியைச் சேர்ந்தவர் வேல் முருகன் (51). அவர் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள படிக்கட்டின் கிரில்லில் தூக்குப்போட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நபரை மீட்டு, உடனடியாக வெண்டிலேட்டர் சிகிச்சையளித்து வருகின்றனர். 

மனச்சோர்வு காரணமாகத் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.