புது தில்லி: கரோனா பொது முடக்கம் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் விவசாயகத்தை முன்னெடுக்கும் வகையில், தலா ஒரு லட்சம் பணமதிப்பு கொண்ட ஒரு கோடி கிசான் அட்டைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 17-ம் தேதி நிலவரப்படி, 1.22 கோடி கிசான் அட்டைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அட்டைகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1,02,065 கோடி மணமதிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், வேளாண் துறை பெரிய அளவில் வளர்ச்சியைக் காணும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்த தற்சார்புத் திட்டத்தில், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால்பண்ணையாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இதன் மூலம்ட 2.5 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும் அறிவித்திருந்தது. அந்த திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
திமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: சு. வெங்கடேசன் எம்.பி.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


