புது தில்லி: ‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகளிடையே உருவான பயணத் தடைகளின் காரணமாக, பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மற்றும் கப்பல் மூலம் மீட்பதற்காக ‘வந்தே பாரத்’ திட்டம் மே மாத துவக்கத்தில் மத்திய வெளியுறவுத் துறையினால் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் வியாழனன்று நடைபெற்ற வாரந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக நாடு திரும்பியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்களை மீட்டுள்ளோம். இதன்காரணனமாக இந்தியர்களை மீட்கும் மிகப் பெரிய திட்டமாக இது நடந்து வருகிறது. நாம் இப்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று துவங்கப்பட்ட ஐந்தாவது கட்டத்தில் இருக்கிறோம்.
எங்களுக்கு நமது தூதரகங்களில் இருந்து கிடைத்துள்ள கணக்கீடுகளின்படி,மேலும் 60 விமானப் பயணங்களுக்கு திட்டமிட்டுளோம். இதன்மூலம் இந்த திட்டத்தில் இந்த மாதத்தில் மேற்கொள்ள உள்ள பயணங்களின் எண்ணிக்கை 746 ஆக உயர்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றால்... தேர்தல் செலவை ஏற்கக் கோரிய மனு தள்ளுபடி!

சென்னையில் விரைவில் 2-வது ஏசி புறநகர் ரயில்! சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயக்கம்?

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி: ஏற்க மறுக்கும் யானைக் கூட்டம்! வனத்துறை முயற்சி தோல்வி!!
3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


