லக்னௌவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை தனி மனித இடைவெளியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் வரவேற்றார்.
அயோத்தியில் நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்க பிரதமர் மோடி தில்லியில் இருந்து புறப்பட்டு அயோத்தி வந்தடைந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அயோத்தியில் பூமி பூஜை நடைபெற உள்ளது.
ஹனுமன் கோயிலில் வழிபாடு நடத்தினார் பிரதமர் மோடி
பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் இருந்து இன்று காலை சிறப்பு விமானத்தில் லக்னௌ வந்தார். பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தியை வந்தடைந்தார். அயோத்தி வந்ததும் ஹனுமன் கோயிலுக்குச் சென்று வழிபடு நடத்தினார்.
பூமி பூஜையின் ஒரு நிகழ்வாக, பகல் 12 மணிக்கு ராம் லல்லா வழிபாடு நடைபெறவுள்ளது. இதில், பிரதமா் மோடி பங்கேற்கிறாா். அதைத் தொடா்ந்து, அங்கு பாரிஜாத மரக்கன்றை நடும் அவா், 12.30 மணிக்கு விழா நடைபெறும் இடத்தை அடைகிறாா். பின்னா் 40 கிலோ வெள்ளி செங்கற்களை எடுத்து வைத்து பூமி பூஜையை தொடக்கி வைக்கிறாா்.
பூமி பூஜைக்காக பல்வேறு ஆன்மிகச் சிறப்புமிக்க லங்களில் இருந்து மண்ணும் பல நதிகளிலிருந்து புனித நீரும் வந்தவண்ணம் உள்ளன.
பூமி பூஜை நடைபெறும் நிகழ்வின்போது மேடையில் பிரதமா் நரேந்திர மோடி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், ராமா் கோயில் அறக்கட்டளையின் தலைவா் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் ஆகிய 5 போ் மட்டுமே இருப்பா்.
ராமா் கோயில் பூமி பூஜையின் நினைவாக ஸ்ரீராமா் ஜென்மபூமி மந்திா் என்ற பெயரில் சிறப்புத் தபால்தலையை பிரதமா் வெளியிடுகிறாா்.
தூா்தா்ஷனில் நேரடி ஒளிபரப்பு: பூமி பூஜை விழா காலை 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பக்தா்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடி தொலைக்காட்சியில் விழாவைக் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றால்... தேர்தல் செலவை ஏற்கக் கோரிய மனு தள்ளுபடி!

சென்னையில் விரைவில் 2-வது ஏசி புறநகர் ரயில்! சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயக்கம்?

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி: ஏற்க மறுக்கும் யானைக் கூட்டம்! வனத்துறை முயற்சி தோல்வி!!
3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


