இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களுக்கான சங்கத் தலைவர் மருத்துவர் எச்.எம். பிரசன்னா கூறுகையில், தனியார் மருத்துவமனைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கவனித்து வருகிறோம். நிலைமை சீரடையாவிட்டால் ஊதியக் குறைப்பு அல்லது பணி நீக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது வரும். ரூ.30 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெரும் செவிலியர்களுக்கு 10 - 20% ஊதியக் குறைப்பு செய்யப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெறும் மருத்துவர்களுக்கும் ஊதியக் குறைப்பு செய்யப்படும். இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பொருளாதார நிலைமை சீரடைந்ததும் பழைய ஊதியத்தைக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.