பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

மத்தியப் பிரதேசத்தில் கரோனாவில் இருந்து மீண்ட 35 பேர் வீடு திரும்பினர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 35 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:28 pm

ANI


இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 35 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை அம்மாநிலத்தில் 1,310 பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தூரில் மட்டும் 892 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 69 பேர் குணமடைந்த நிலையில், 69 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 

இந்தூர் மற்றும் கார்கோனில் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 35 பேர் குணமாகி சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.