இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவியைக் காப்பாற்ற அமைச்சரவை புது முயற்சி

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவியைக் காப்பாற்ற மாநில அமைச்சரவை புது முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது.

News image

உத்தவ் தாக்கரே

Updated On :9 ஏப்ரல் 2020, 10:49 am

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவியைக் காப்பாற்ற மாநில அமைச்சரவை புது முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக மனிதர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாடுகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்கள் பாதித்து தனிநபர்களும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் மிகப்பெரிய அரசியல் பிரச்னை ஏற்படவிருக்கிறது.

அதாவது மகாராஷ்டிர மாநில முதல்வராக இருக்கும் உத்தவ் தாக்கரே, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத நிலையில், கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் தேதி மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத ஒருவர் முதல்வராக பொறுப்பேற்று, ஆறு மாதத்தில் தேர்தலை சந்தித்து சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும். அந்த வகையில், உத்தவ் தாக்கரேவுக்கான ஆறு மாத கால அவகாசம் மே மாதம் 28ம் தேதியோடு முடிவடைகிறது.

ஆனால் கரோனா தொற்று காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போதைக்கு தேர்தல் அறிவித்து, அதனை நடத்தி முடிக்கும் சூழ்நிலை ஏற்படாத நிலையில், மீண்டும் அங்கு மிகப்பெரிய அரசியல் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டாகியுள்ளது. மேலும், ஆறு மாத கால அவகாசத்தை நீட்டிக்கவும் சட்டத்தில்  இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவியைக் காப்பாற்ற மாநில அமைச்சரவை புது முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது.

அதன்படி மாநில அமைச்சரவை புதனன்று துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் கூடி எடுத்த முடிவின்படி, மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் முதலவர் உத்தவ் தாக்கரேவை சட்டபேரவை மேலவை உறுப்பினராக நியமிக்கும்படி கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அம்மாநில சட்டப்படி ஆளுநருக்கு இரண்டு சட்ட மேலவை உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

மாநில அமைச்சரவையின் இந்த தீர்மானத்தின் மூலம் மகாராஷ்ட்ராவில் ஏற்படவிருந்த அரசியல் குழப்பம் தவிர்க்கப்பட்டது என்று கூறலாம்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.