நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

தெலங்கானாவில் பொது இடங்களில் எச்சில் துப்பத் தடை

தெலங்கானாவில் பொது இடங்களில் எச்சில் துப்பத் தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
எச்சில் துப்பத் தடை
Updated On :27 ஜனவரி 2024, 4:23 pm

IANS

ஹைதராபாத்: தெலங்கானாவில் பொது இடங்களில் எச்சில் துப்பத் தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 5360 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 164 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தெலங்கானாவில் பொது இடங்களில் எச்சில் துப்பத் தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, பொது இடங்களில் பான் உள்ளிட்ட எந்த விதமான் புகையிலைப் பொருட்களையும் பயன்படுத்தி விட்டு எச்சில் துப்பத் தடை விதிக்கப்படுகிறது என்றும், மக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.  மேலும் கரோனா பரவல் போன்ற சூழ்நிலைகள் நமக்கு தனிநபர் சுகாதாரம் மற்றும் பொது இடங்களைத் தூய்மையாக பரமரித்தலின் அவசியத்தை விளக்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.