நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கரோனா பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

கரோனா பரிசோதனைக்கு தனியார் பரிசோதனைக் கூடங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:23 pm

IANS

புது தில்லி: கரோனா பரிசோதனைக்கு தனியார் பரிசோதனைக் கூடங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கரோனா பரிசோதனைக்காக செலவாகும் தொகையை மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் யோசனை அளித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண், நாடு பேரிடரை சந்தித்திருக்கும் நிலையில், தனியார் பரிசோதனை மையங்கள், கரோனா பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கரோனா பரிசோதனைக்கு ஆகும் செலவை மத்திய அரசு திரும்ப செலுத்துவது குறித்து கருத்துக் கேட்டபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மத்திய அரசிடம் இது பற்றி விளக்கம் பெற்று பதில் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விசாரணையின் போது, இந்தியாவில் தற்போது 118 பரிசோதனைக் கூடங்களில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாகவும், 47 தனியார் பரிசோதனை மையங்களும் இந்த பணியில் தற்போது இணைந்திருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.