/

சென்னை, மும்பை, பெங்களூரு ரயில் நிலையங்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது வெடிகுண்டு மிரட்டல்

ரயில் நிலையங்கள் மற்றும் கோயில்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

News image

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதத் தலைவன் ஹஃபீஸ் சயீது

Updated On :16 செப்டம்பர் 2019, 4:30 am

சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மற்றும் கோயில்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ரோடாக் ரயில் நிலைய அதிகாரி யாஷ்பால் மீனாவுக்கு வந்த செப்டம்பர் 14-ஆம் தேதி வந்த கடிதத்தில், ஹரியாணாவின் ரோடாக், சென்னை, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட 12 ரயில் நிலையங்கள் மற்றும் கோயில்களில் அக்டோபர் 8-ஆம் தேதி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக ஜெய்ஷ்-இ-முகமது மிரட்டல் விடுத்துள்ளது.

இந்நிலையில், ரோடாக் நகர இணை ஆய்வாளர் நரேந்திர சிங் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டு சிறப்புப் படையினர் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.