சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

2012 தில்லி நிர்பயா சம்பவம்: பாலியல் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது எப்போது?

இன்னும் 7 நாட்களுக்குள், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்படவில்லை என்றால், 2012 நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று திகார் சிறைத் துற

News image
நிர்பயா சம்பவம்
Updated On :31 ஜனவரி 2024, 10:35 am

ENS

இன்னும் 7 நாட்களுக்குள், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்படவில்லை என்றால், 2012 நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று திகார் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குற்றவாளிகளுக்கு திகார் சிறைத் துறை நிர்வாகம் ஒரு நோட்டீஸை அளித்துள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் திகார் சிறையிலும், ஒருவர் மண்டோலி சிறையின் 14வது அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை தில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துவிட்டது.

ஆனால், தீர்ப்பை மறுசீராய்வு செய்யவோ, தண்டனையை நிறுத்தி வைக்கவோ குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தை நாடவில்லை. எனவே, குற்றவாளிகள் நான்கு பேரும் 7 நாட்களுக்குள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி, அதற்கு பதில் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான நோட்டீஸ் குற்றவாளிகளிடம் அக்டோபர் 28ம் தேதி சிறைத் துறை அளித்துள்ளது. 

இதன் பிறகு, குற்றவாளிகள் 4 பேரும் பதற்றத்தோடு காணப்படுவதாக சிறைத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை குறிப்பிட்ட 7 நாட்களுக்குள் கருணை மனு தாக்கல் செய்யப்படாவிட்டால், சட்டப்படி, குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகளில் சிறைத்துறை ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.