சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவிருக்கும்  அரவிந்த் போப்டே அளித்த பரபரப்பு தீர்ப்புகள்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் போப்டே (63) நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
சரத் அரவிந்த் போப்டே
Updated On :31 ஜனவரி 2024, 10:34 am

ENS


உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் போப்டே (63) நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே, அடுத்த மாதம் 18-ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறாா்.

தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி பதவியேற்றாா். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக தனக்கு அடுத்த மூத்த நீதிபதியான எஸ்.ஏ.போப்டேவை நியமிக்குமாறு மத்திய சட்டத் துறை அமைச்சருக்கு ரஞ்சன் கோகோய் அண்மையில் பரிந்துரை செய்திருந்தாா்.

Story image

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டேவை நியமிக்கும் ஆணையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டுள்ளதாக, சட்ட அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த 1956-இல் பிறந்தவரான போப்டே, நாகபுரி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தாா். இவரது தந்தை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் போப்டே, புகழ்பெற்ற வழக்குரைஞா் ஆவாா்.

உச்ச நீதிமன்ற நீதிபதி போப்டே அளித்த சில முக்கியத் தீர்ப்புகளின் விவரம் 

2016.. தில்லியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து, தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் காற்று மாசு மோசமடைந்த நிலையில், பட்டாசுகள் விற்பனையை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

Story image


2017.. டவுன்சின்ட்ரோம் நோய் பாதித்த 23 வாரக் கருவைக் கலைக்க உத்தரவிடக் கோரி 37 வயது பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஷரத் அரவிந்த் போப்டே, நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

Story image

2018.. ஆதாா் தொடா்பான வழக்கு உள்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் எஸ்.ஏ.போப்டே தீா்ப்பளித்துள்ளாா். ஆதாா் இல்லை என்பதற்காக அரசின் சேவைகளை மறுக்கக் கூடாது என்று தீா்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமா்விலும், தனிநபா் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என்று தீா்ப்பளித்த 9 நீதிபதிகள் கொண்ட அமா்விலும் போப்டே இடம்பெற்றிருந்தாா்.

Story image

2019.. தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் புகாா் எழுந்தபோது, போப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழுதான் அந்தப் புகாரை விசாரித்தது. பின்னா், கோகோய்க்கு அக்குழு நற்சான்றிதழ் அளித்தது.

Story image

2019.. அயோத்தியில் சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வில் போப்டே இடம்பெற்றுள்ளாா். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அடுத்த மாதம் தீா்ப்பளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Story image

உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில், வழக்குகள் ஒதுக்கீடு தொடா்பாக அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட சில மூத்த நீதிபதிகளுக்கும் இடையே பிரச்னை எழுந்தபோது, இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டவராக எஸ்.ஏ.போப்டே அறியப்படுகிறாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.