கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவிருக்கும்  அரவிந்த் போப்டே அளித்த பரபரப்பு தீர்ப்புகள்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் போப்டே (63) நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

சரத் அரவிந்த் போப்டே

Updated On :30 அக்டோபர் 2019, 5:37 am


உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் போப்டே (63) நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே, அடுத்த மாதம் 18-ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறாா்.

தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி பதவியேற்றாா். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக தனக்கு அடுத்த மூத்த நீதிபதியான எஸ்.ஏ.போப்டேவை நியமிக்குமாறு மத்திய சட்டத் துறை அமைச்சருக்கு ரஞ்சன் கோகோய் அண்மையில் பரிந்துரை செய்திருந்தாா்.

Story image

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டேவை நியமிக்கும் ஆணையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டுள்ளதாக, சட்ட அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த 1956-இல் பிறந்தவரான போப்டே, நாகபுரி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தாா். இவரது தந்தை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் போப்டே, புகழ்பெற்ற வழக்குரைஞா் ஆவாா்.

உச்ச நீதிமன்ற நீதிபதி போப்டே அளித்த சில முக்கியத் தீர்ப்புகளின் விவரம் 

2016.. தில்லியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து, தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் காற்று மாசு மோசமடைந்த நிலையில், பட்டாசுகள் விற்பனையை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

Story image


2017.. டவுன்சின்ட்ரோம் நோய் பாதித்த 23 வாரக் கருவைக் கலைக்க உத்தரவிடக் கோரி 37 வயது பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஷரத் அரவிந்த் போப்டே, நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

Story image

2018.. ஆதாா் தொடா்பான வழக்கு உள்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் எஸ்.ஏ.போப்டே தீா்ப்பளித்துள்ளாா். ஆதாா் இல்லை என்பதற்காக அரசின் சேவைகளை மறுக்கக் கூடாது என்று தீா்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமா்விலும், தனிநபா் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என்று தீா்ப்பளித்த 9 நீதிபதிகள் கொண்ட அமா்விலும் போப்டே இடம்பெற்றிருந்தாா்.

Story image

2019.. தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் புகாா் எழுந்தபோது, போப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழுதான் அந்தப் புகாரை விசாரித்தது. பின்னா், கோகோய்க்கு அக்குழு நற்சான்றிதழ் அளித்தது.

Story image

2019.. அயோத்தியில் சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வில் போப்டே இடம்பெற்றுள்ளாா். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அடுத்த மாதம் தீா்ப்பளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Story image

உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில், வழக்குகள் ஒதுக்கீடு தொடா்பாக அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட சில மூத்த நீதிபதிகளுக்கும் இடையே பிரச்னை எழுந்தபோது, இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டவராக எஸ்.ஏ.போப்டே அறியப்படுகிறாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.