வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உ.பியில் கொடூரம்: பிறந்து சில மணி நேரங்களில் பெண் குழந்தை உயிருடன் எரிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த பெண் குழந்தை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:23 am

ENS

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த பெண் குழந்தை உயிருடன் எரிக்கப்பட்டு, தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று பல சமூக அமைப்புகளும் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகின்றன. இருந்த போதிலும், பிறந்த பெண் குழந்தைகளை சிசுக்கொலை செய்யும் சம்பவங்கள் ஒரு சில இடங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த உடனேயே பெண் குழந்தை ஒன்று தீக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து விசாரணை செய்ததில், பெண் குழந்தை என்பதால் கொலை செய்ய முயற்சிதந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

முதற்கட்டமாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர் தான் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளார். குழந்தையின் உடல் முழுவதுமே தீக்காயங்கள் இருப்பதால் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

பிறந்து சில மணி நேரங்களிலேயே பெண் குழந்தை எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.