2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மூன்று வயது தலித் சிறுவனை கத்தியால் தாக்கிய அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் உதவியாளர்! 

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கெரமக்கியில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் மூன்று வயது தலித் சிறுவன் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளான்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:17 pm

ENS

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கெரமக்கியில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் மூன்று வயது தலித் சிறுவன், அங்குள்ள ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ளான். அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் உதவியாளர் சிறுவனை கத்தியால் தாக்கியுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அங்கன்வாடி ஆசிரியர் மாலாவுக்கும் உதவியாளர் மஞ்சுலம்மாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்ட போது இடையே சிறுவன் வந்துள்ளான். இவர்கள் இருவரது சண்டையைப் பார்த்து பயத்தில் அவன் சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கோபத்தில் சிறுவனின் தலையில் கத்தியால் தாக்கியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

சிறுவனின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை செய்ய முயற்சித்ததாக  ஐ.பி.சி பிரிவு 308 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மல்லந்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் உதவியாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் பாண்டே தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.