2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கொல்கத்தாவில் கொட்டிய பணமழை: ஜன்னல் வழியாக வீசப்பட்ட 2000, 500, 100 ரூபாய் நோட்டுகள்

ஒரு அடுக்குமாடியின் 6வது தளத்தில் இருந்த தனியார் நிறுவனத்தில் நடைபெறவிருந்த சோதனைக்கு பயந்து, கத்தைக் கத்தையாக ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Currency rain from 6th floor of Kolkata office
Updated On :31 ஜனவரி 2024, 1:13 pm

ENS


கொல்கத்தா: ஒரு அடுக்குமாடியின் 6வது தளத்தில் இருந்த தனியார் நிறுவனத்தில் நடைபெறவிருந்த சோதனைக்கு பயந்து, கத்தைக் கத்தையாக ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை மதியம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவ்வழியாகச் சென்றவர்கள், வானத்தில் இருந்து பணமழைப் பொழிவதைப் பார்த்து அதிர்ச்சியும், அதே சமயம் ஆனந்தமும் அடைந்தனர்.

மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அந்த கட்டத்தின் 6வது தளத்தில் இயங்கி வந்த ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனத்தில், வரி மோசடி நடப்பதை அறிந்து, அங்கு சோதனையில் ஈடுபடச் சென்றனர்.

அப்போது நிறுவனத்தில் இருந்த கணக்கில் வராத பணத்தை என்ன செய்வது என்று தெரியாத நிர்வாகத்தினர், பணத்தை ஜன்னல் வழியாக வெளியே கொட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வருவாய் புலனாய்வுப் பிரிவு சோதனைக்கும், இந்த பணமழைக்கும் தொடர்பிருக்கிறதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்னவாக இருந்தாலும், அந்த கட்டத்தின் கீழே நடந்து சென்றவர்களுக்கு நேற்று கொண்டாட்டம்தான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.