2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் அவலம்!

வன்கொடுமைக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் உரிமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் வன்முறைக்கோ அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கோ ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:12 pm

ENS


குவகாத்தி : வன்கொடுமைக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் உரிமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் வன்முறைக்கோ அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கோ ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் 4 லட்சம் குழந்தைகளின் நிலை மிகவும் அபாயகரமான இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் என்ற தலைப்பில் ஐ.நா.வின் குழந்தை உரிமை அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் முதல் இடத்திலும், அதனைத் தொடர்ந்து அஸ்ஸாம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரத்தின் அடிப்படையில், 2017ஆம் ஆண்டு இந்தியாவில் 4,857 குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாகவும், 30,123 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதில் மத்தியப் பிரதேசத்தில்தான் அதிகபட்சமாக 1,638 வழக்குகள் பதிவாகியுள்ளது. அஸ்ஸாமில் 1,127 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 179 ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.