ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் அவலம்!

வன்கொடுமைக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் உரிமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் வன்முறைக்கோ அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கோ ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2019, 7:44 am


குவகாத்தி : வன்கொடுமைக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் உரிமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் வன்முறைக்கோ அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கோ ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் 4 லட்சம் குழந்தைகளின் நிலை மிகவும் அபாயகரமான இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் என்ற தலைப்பில் ஐ.நா.வின் குழந்தை உரிமை அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் முதல் இடத்திலும், அதனைத் தொடர்ந்து அஸ்ஸாம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரத்தின் அடிப்படையில், 2017ஆம் ஆண்டு இந்தியாவில் 4,857 குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாகவும், 30,123 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதில் மத்தியப் பிரதேசத்தில்தான் அதிகபட்சமாக 1,638 வழக்குகள் பதிவாகியுள்ளது. அஸ்ஸாமில் 1,127 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 179 ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.