ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 'வாவ்' சொல்ல வைக்கும் சிறப்பு வசதி

தாஜ்மகாலைப் பார்க்க வரும் சுற்றலாப் பயணிகள், தாஜ்மகாலை சற்று தொலைவில் நின்று ஒட்டுமொத்த அழகையும் கண்டுரசிக்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

News image

new viewpoint for Taj Mahal

Updated On :16 நவம்பர் 2019, 7:33 am


ஆக்ரா: தாஜ்மகாலைப் பார்க்க வரும் சுற்றலாப் பயணிகள், தாஜ்மகாலை சற்று தொலைவில் நின்று ஒட்டுமொத்த அழகையும் கண்டுரசிக்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

தாஜ்மகாலின் அழகைக் காண புதிதாகக் கட்டப்பட்ட வியூ பாயிண்ட் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டிருக்கிறது. இங்கு நின்றபடி, நிலா வெளிச்சத்தில் தாஜ்மகாலின் அழகைக் கண்டுகளிக்கலாம்.

தாஜ்மகாலுக்கு அருகே மேஹ்தாப் பாக் தாஜ் வியூ பாயிண்ட்டை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திறந்துவைத்தார். இந்த வியூ பாயிண்ட், தினமும் காலை 7-10 மணி வரையும், மாலையில் 7-10 மணி வரையும் திறக்கப்படும். கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரா மேம்பாட்டுக் கழகத்தால் இந்த தாஜ் வியூ பாயிண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், இதுபோல ஏராளமான பகுதிகளில் வியூ பாயிண்ட்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாகத் திறக்கப்பட்ட வியூ பாயிண்டில் இருந்து தாஜ் மகாலைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இரவு நேரத்தில் தாஜ் மகாலின் அழகை இவ்வளவு அருகில் நின்று முழுமையாக பார்ப்பது என்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது என்று சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.