ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மக்களே உஷார்! சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்ததில், தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் பலி!

சார்ஜ்ஜில் போட்டபடி, செல்போனில் பேசாதீர்கள் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உறங்கும் போது செல்போனை அருகே சார்ஜில் போடும் பழக்கம் கொண்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த சம்பவம்.

News image

இளைஞர் பலி

Updated On :12 நவம்பர் 2019, 7:45 am


புவனேஸ்வர்: சார்ஜ்ஜில் போட்டபடி, செல்போனில் பேசாதீர்கள் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உறங்கும் போது செல்போனை அருகே சார்ஜில் போடும் பழக்கம் கொண்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த சம்பவம்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜகத்சிங்புர் மாவட்டத்தில் சார்ஜ்ஜில் போட்டிருந்த செல்போன் வெடித்ததில், அருகே உறங்கிக் கொண்டிருந்த 22 வயது இளைஞர் மரணம் அடைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் உறங்கிக் கொண்டிருக்கும் போது, முழுவதுமாக சார்ஜ் ஏறிய செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், அருகே இருந்த குணா பிரதான் என்ற இளைஞர் மரணம் அடைந்தார்.

பாரதீப் பகுதியில் ஜெகன்னாதர் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளியான குணா பிரதான் மரணம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம், தினமும் இரவில் தலையணைக்கு அருகே செல்போனை சார்ஜில் போட்டபடி உறங்கும் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.