எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு யோகி ஆதித்யநாத் தலைமை தாங்க வேண்டும்: ராம் ஜென்மபூமி நியாஸ்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்க வேண்டும் என்று ராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:06 pm

Muthumari

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்க வேண்டும் என்று ராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் நிரிட்யா கோபால் தாஸ் கூறுகையில், 'மாநிலத்தின் முதல்வராக அல்லாமல் கோரக்நாத் ஆலயத்தின் தலைமை குருவாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் அறக்கட்டளைக்கு யோகி ஆதித்யநாத் தலைமை தாங்க வேண்டும். 

ராமர் கோவில் இயக்கத்திலும், கோரக்நாத் கோவில் நிர்வாகிகள் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அதிலும், மஹந்த் திக்விஜய் சிங், மஹந்த் அவைத்யநாத் மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ராம் இயக்கத்தை வழிநடத்தியதில் முக்கியமானவர்கள். 

ராமர் கோவில் அறக்கட்டளை, யோகி ஆதித்யநாத் தலைமையில் இருப்பதோடு, விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர்  சம்பத் ராய் மற்றும் வி.எச்.பி பொருளாளர் ஓம் பிரகாஷ் சிங்கால் ஆகியோர் அறக்கட்டளை உறுப்பினர்களாக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.