2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அம்பானி, அதானிக்கு முன்னதாகவே தெரியும்: பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை வீடியோ!

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:02 pm

ENS

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த திடீர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் பல கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இந்த நடவடிக்கையால் தான் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது என்று தற்போது வரை பொருளாதார நிபுணர்கள் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  

இந்நிலையில், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது, ராஜஸ்தான் கோட்டா பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பவானி சிங் ராஜாவத் பேசிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போதும் இது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அவர் ஒரு வீடியோவில், 'மத்திய அரசு 2016, நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே, அதானி, அம்பானி உள்ளிட்டோர் இதுகுறித்து தெரிந்திருந்தனர். அவர்களுக்கு குறிப்புடன் இது தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப அவர்கள் முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்' என்று குறிப்பிட்டார். 

மேலும், 'பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே மாற்று ஏற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும். புதிய நாணயத்தை தேவைக்கேற்ப அச்சிட்டிருக்க வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிடப்படாத ஒன்று. படிப்படியாக இதனை செயல்படுத்தியிருக்கலாம்' என்று கூறினார். பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சு பின்னர் பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

பவானி சிங் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஒரு சமயம் கோட்டா பயிற்சி மையங்களில் உள்ள பீகாரி மாணவர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அதேபோன்று, வழுக்கை ஏற்படும் என்பதால் ஹெல்மெட் அணிவதைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அவர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.