திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தாஜ்மஹால் நகரில் காற்று மாசுபாடு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.6.84 கோடி அபராதம்!

ஆக்ரா நகரில் காற்றை மாசுபடுத்தியதற்காக உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 12:58 pm

Muthumari

புகழ்பெற்ற தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரில் காற்றை மாசுபடுத்தியதற்காக உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது. 

தில்லியில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதை அடுத்து, அங்கு பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தில்லியில் சில தினங்களாக புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க கட்டுமானப்பணிகள் நிறுத்தம், வாகனக் கட்டுப்பாடு என அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

Story image

இந்த நிலையில், உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தாஜ்மஹால் உள்ள ஆக்ரா நகரமும் காற்று மாசுபாட்டுக்கு ஆளாகியுள்ளது. காற்று மாசுபாட்டினால் தாஜ்மஹாலின் முகப்பிலும் புகை சூழ்ந்துள்ளது. இதையடுத்து ஆக்ரா நகரில் காற்றை மாசுபடுத்தியதற்காக உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது. 

நகரைச் சுற்றியுள்ள கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தவும், ஆக்ரா நகரில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தண்ணீரைப் பாய்ச்சுதல் உள்ளிட்ட துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதை மீறியும், கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிட்டால், கட்டுமானக் கழிவை அப்புறப்படுத்தும் விதிகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.