திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது: சிக்கிம் முதல்வராக பி.எஸ். கோலோ பதவியேற்பு

சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் பிஎஸ் கோலே மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

News image
Updated On :27 மே 2019, 9:50 am

சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் பிஎஸ் கோலே மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

பல்ஜோர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியற்பு விழாவில் சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத பிஎஸ் கோகலேவை, அக்கட்சியின் எம்எல்ஏக்கள், கட்சியின் சட்டப்பேரவை குழுத்தலைவராக தேர்வு செய்ததை அடுத்து, இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 51வயதாகும் கோலே நேபாள மொழியில்  முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17 இடங்களைக் கைப்பற்றி எஸ்.கே.எம். கட்சி வெற்றி பெற்றது. சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், அந்த மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக நீடித்து வந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக, தலைநகர் காங்டாக்கில் எஸ்.கே.எம். கட்சியின் தலைவர் பி.எஸ்.கோலே தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், ஆளுநர் கங்கா பிரசாதை அவரது மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினர். 

பி.எஸ்.கோலே, ஏற்கெனவே ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர். மேலும், கடந்த 2017-இல் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்ககம் செய்யப்பட்டவர். எனவே, அவருக்கு முதல்வர் பதவியை வழங்குவதில் உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து, சட்ட நிபுணர்களிடம் ஆளுநர் ஆலோசனை  நடத்திய பிறகே, அவரை ஆட்சியமைக்க அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.