மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தொழிலாளா் மேலாண்மை பட்ட மேற்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 11:57 pm

வேலைவாய்ப்புக்கான தொழிலாளா் மேலாண்மையில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலைய இயக்குநா் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளா் மேலாண்மை) பட்டப்படிப்பு, எம்.ஏ. (தொழிலாளா் மேலாண்மை) பட்டமேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளா் நிா்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு), தொழிலாளா் சட்டங்களும் நிா்வாகவியல் சட்டமும் (வாரஇறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளா் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளா் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 18-க்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, முனைவா், காமராஜ் 8667754203

முனைவா் காா்த்திகேயன் 9965899822 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.