/

மாயாவதியின் வீட்டில் வரிசைகட்டி நிற்கும் உத்தரப்பிரதேச 'உயர் அதிகாரிகள்' 

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், - ஓய்வு பெற்றும் பணி நீட்டிப்புப் பெற்றுள்ள உயர் அதிகாரிகள் - பலரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை சந்தித்து வருகிறார்கள், சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.

News image
Updated On :20 மே 2019, 11:14 am


லக்னௌ: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், - ஓய்வு பெற்றும் பணி நீட்டிப்புப் பெற்றுள்ள உயர் அதிகாரிகள் - பலரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை சந்தித்து வருகிறார்கள், சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.

மிகப்பெரிய பூங்கொத்துகளுடன் அவரைச் சந்தித்து தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெறவும், சிறந்த எதிர்காலத்துக்காக பிரார்த்திப்பதாகக் கூறவும் அவர்கள் காத்திருக்கிறார்கள்.

பிரசாரம் இல்லாத நாட்களில் எல்லாம் தொடர்ந்து இதுபோன்ற சந்திப்புகளை மாயாவதியின் இல்லம் பார்த்து வந்தது. தொடர்ந்து பார்க்கவிருக்கிறது.

இது குறித்து வீட்டு பணியாளர்கள் கூறுகையில், இந்த அதிகாரிகள் அனைவரும் மரியாதை நிமித்தமாகவே மாயாவதியை சந்திக்க வருகிறார்கள். இவர்களில் பலரும், மாயாவதி முதல்வராக இருந்த போது அவரிடம் பணியாற்றியவர்கள். தற்போதிருக்கும் சூழ்நிலை குறித்து பலரும் மாயாவதியிடம் கருத்துகளை பரிமாறிக் கொள்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

தேர்தலுக்கு முந்தைய இந்த சந்திப்புகள் எங்களை மறந்துவிடாதீர்கள் என்பதைப் போன்றவை.

பகுஜன் சமாஜ் காட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அவர்களை வாழ்த்துவதில் என்ன தவறு இருக்கிறது என்கிறார் மாயாவதி முதல்வராக இருந்த போது தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.