நடப்பு மக்களவைத் தேர்தலில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பங்கு அளப்பரியது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் பெருமிதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டதாவது:
இன்றுடன் 7-ஆவது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் நமது தாய்மார்களும், சகோதரிகளும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். வேட்பாளர்களாக மட்டுமல்லாமல் வாக்காளர்களாகவும் சிறப்பித்துள்ளனர். பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதனுடன் பெண்களை போற்றும் விதமாக காங்கிரஸ் வெளியிட்ட விடியோப் பதிவையும் இணைத்துள்ளார்.
அதில், பெண்கள் தங்களின் வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்தும், இருதரப்புக்குமான சம வாய்ப்பு தொடர்பாகவும் பேசுகின்றனர். புதிய யோசனைகள், புதிய தலைவர்கள், புதிய அரசியல் முறை தொடர்பாக விருப்பம் தெரிவிக்கின்றனர்.
மேலும் நடப்பு தேர்தலின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக தாங்கள் இருக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


