புது தில்லி: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மீதான தேர்தல் நடத்தை விதி மீறல் புகார் மீதான விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு வெடித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது முதன்முறை வாக்காளர்கள், பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று மோடி கூறியிருந்தார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று புகார் அளிக்கப்பட்டது.
இதேப்போல, இந்திய பாதுகாப்புப் படை வீரர்களை மோடியின் படை என்று அமித்ஷா பேசியிருந்ததற்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இவ்விரண்டு புகார்களையும் ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், இதில் எவ்வித தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லை என்று முடிவெடுத்தது. இதேப்போன்ற 8 புகார்களுக்குமே தேர்தல் ஆணையம் பச்சைக்கொடியே காட்டியது.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், எனது கருத்தை ஏற்கப்படாததால், இனி தேர்தல் ஆணையக் கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர் என்றும், இது தொடர்பான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை. எனது கருத்துகளை ஏற்றுக் கொள்ளாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

ரயில்வே துறையில் ஆள் குறைப்பு முடிவை கைவிட வேண்டும்: மாா்க்சிஸ்ட், மதிமுக கோரிக்கை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


