டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஹிமாச்சலப் பிரதேசத்தில் காத்திருக்கும் 50 லட்சம் பேர்! நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு

7-ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 50 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

News image
Updated On :18 மே 2019, 5:41 am

7-ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 50 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இவற்றில் 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது 7-ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு (மே 19) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 7-ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி டி.கே.ரத்தன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் 53 லட்சத்து 30 ஆயிரத்து 154 வாக்காளர்கள் உள்ளனர். 7,730 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 373 வாக்குப்பதிவு மையங்கள் மோசமானதாக கணக்கிடப்பட்டுள்ளது.

47 கம்பெனி பாதுகாப்புப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.