நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஹிமாச்சலப் பிரதேசத்தில் காத்திருக்கும் 50 லட்சம் பேர்! நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு

7-ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 50 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:56 am

ANI

7-ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 50 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இவற்றில் 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது 7-ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு (மே 19) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 7-ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி டி.கே.ரத்தன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் 53 லட்சத்து 30 ஆயிரத்து 154 வாக்காளர்கள் உள்ளனர். 7,730 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 373 வாக்குப்பதிவு மையங்கள் மோசமானதாக கணக்கிடப்பட்டுள்ளது.

47 கம்பெனி பாதுகாப்புப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.