டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பாஜக 100 வருடங்கள் ஆட்சி செய்தாலும் 370 சட்டப்பிரிவை நீக்காது: குலாம் நபி ஆசாத் உறுதி

100 வருடங்கள் ஆட்சி செய்தாலும் ஜம்மு-காஷ்மீரின் 370 சிறப்பு சட்டப்பிரிவை பாஜக நீக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார். 

News image
Updated On :18 மே 2019, 5:24 am

100 வருடங்கள் ஆட்சி செய்தாலும் ஜம்மு-காஷ்மீரின் 370 சிறப்பு சட்டப்பிரிவை பாஜக நீக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரையில் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை தான் இந்த தேர்தலின் முக்கிய பிரசாரமாக இருந்தது. ஆனால், அவற்றில் இருந்து திசை திருப்பவே மசூத் அஸார் விவகாரங்கள் பாஜக-வால் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், அவர்களுடைய கடந்தகால ஆட்சியில் தான் மசூத் அஸார் விடுவிக்கப்பட்டார் என்பது முக்கியமானதாக இல்லை. 

காங்கிரஸ் கட்சி இம்முறை சுமார் 273-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு ஏற்படவில்லை என்றாலும் பரவாயில்லை, கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். 

நாட்டின் மிகப்பெரிய கட்சியின மிகப்பெரிய தலைவராக ராகுல் திகழ்கிறார். எனவே பிரதமர் பதவிக்கு அவர் தான் சரியானவர். 

பாஜக தொடர்ந்து 100 வருடங்களுக்கு ஆட்சி செய்தாலும் ஜம்மு-காஷ்மீரின் 370 சிறப்பு சட்டப்பிரிவை நீக்காது என்று என்னால் உறுதியாக கூற முடியும். ஏனென்றால் அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராக இருந்தபோதே பாஜக இதை செய்யவில்லை என்று விமர்சித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.