டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

வேட்பாளராக இருந்தும் வாக்களிக்காத மூத்த காங்கிரஸ் தலைவர்!

மக்களவை தேர்தலில் போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் வாக்களிக்கவில்லை.

News image
Updated On :12 மே 2019, 4:15 pm

மக்களவை தேர்தலில் போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் வாக்களிக்கவில்லை.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், போபால் தொகுதியில் இருந்து 130 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராஜ்கர் மாவட்டத்தில் திக்விஜய் சிங் வாக்கு உள்ளது. ஆனால், அவர் அங்கு சென்று வாக்களிக்கத் தவறிவிட்டார். இதுகுறித்து திக்விஜய் சிங் அளித்த விளக்கத்தில்,

நான் ராஜ்கர் சென்று வாக்களிக்காததற்கு வருந்துகிறேன். அடுத்தமுறை போபாலில் எனது பெயரை நிச்சயம் பதிவு செய்வேன் என்று கூறியவர், மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை போபாலில் உள்ள கோயிலில் சிறப்பு பிரார்த்தனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திக்விஜய் சிங், எப்படியாவது முயற்சி செய்து எனது வாக்கை பதிவு செய்வேன் என்று உத்தரவாதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.