நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

வேட்பாளராக இருந்தும் வாக்களிக்காத மூத்த காங்கிரஸ் தலைவர்!

மக்களவை தேர்தலில் போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் வாக்களிக்கவில்லை.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:53 am

ANI

மக்களவை தேர்தலில் போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் வாக்களிக்கவில்லை.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், போபால் தொகுதியில் இருந்து 130 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராஜ்கர் மாவட்டத்தில் திக்விஜய் சிங் வாக்கு உள்ளது. ஆனால், அவர் அங்கு சென்று வாக்களிக்கத் தவறிவிட்டார். இதுகுறித்து திக்விஜய் சிங் அளித்த விளக்கத்தில்,

நான் ராஜ்கர் சென்று வாக்களிக்காததற்கு வருந்துகிறேன். அடுத்தமுறை போபாலில் எனது பெயரை நிச்சயம் பதிவு செய்வேன் என்று கூறியவர், மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை போபாலில் உள்ள கோயிலில் சிறப்பு பிரார்த்தனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திக்விஜய் சிங், எப்படியாவது முயற்சி செய்து எனது வாக்கை பதிவு செய்வேன் என்று உத்தரவாதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.