நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ராஜ்தானி விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

தில்லி-புவனேஷ்வர் இடையே இயங்கும் ராஜ்தானி விரைவு ரயிலில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:52 am

ANI


தில்லி-புவனேஷ்வர் இடையே இயங்கும் ராஜ்தானி விரைவு ரயிலில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

தில்லி-புவனேஷ்வர் இடையே இயங்கும் ராஜ்தானி விரைவு ரயில் இன்று ஒடிசாவில் உள்ள காந்தபடா என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென ரயில் தீப்பிடித்து எரிந்தது. 

இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதை அடுத்து பயணிகள் அனைவரும் ரயில் பெட்டிகளில் இருந்து விரைந்து வெளியேறினார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒடிசா தீயணைப்பு வீரர்கள் மற்றும் இயற்கைப் பேரிடர் மீட்புப் பணியார்கள் கூட்டாக செயல்பட்டு தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.