/

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ: நான்கு நாளில் இரண்டாவது நபர்! 

தில்லி பிஜாவாசன் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான தேவிந்தர் ஷெராவட் திங்களன்று பாஜகவில் இணைந்தார்.

News image
Updated On :6 மே 2019, 10:01 am

புது தில்லி: தில்லி பிஜாவாசன் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான தேவிந்தர் ஷெராவட் திங்களன்று பாஜகவில் இணைந்தார்.

சமீப நாட்களாக தங்களது  கட்சி எம்.எல் .ஏக்களை பாஜகவினர் இழுக்க முயல்வதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அர்விந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தில்லி பிஜாவாசன் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான தேவிந்தர் ஷெராவட் திங்களன்று பாஜகவில் இணைந்தார்.

தில்லியில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில எதிர்கட்சித் தலைவரான விஜேந்தர் குப்தாவும் அப்போது உடனிருந்தார்.

கடந்த வெள்ளியன்று  தில்லி காந்தி நகர் தொகுதி எம்.எல்.ஏவான அனில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்தார். எனவே தேவிந்தர் ஷெராவட் கடந்த நான்கு நாளில் பாஜகவில் இணையும் இரண்டாவது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஆகிறார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.