சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மேற்கு வங்கத்தை நள்ளிரவில் தாக்கிய ஃபானி புயல்: இன்று மாலை வங்கதேசத்தை அடையும் (விடியோ)

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இரண்டு நாட்களாக சின்னாபின்னமாக்கி வரும் ஃபானி புயல் நேற்று நள்ளிரவில் மேற்கு வங்கத்தை தாக்கியது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:49 am

ENS


கொல்கத்தா: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இரண்டு நாட்களாக சின்னாபின்னமாக்கி வரும் ஃபானி புயல் நேற்று நள்ளிரவில் மேற்கு வங்கத்தை தாக்கியது.

நேற்று காலை ஒடிஸாவில் மிகப் பயங்கர காற்றுடன் கரையைக் கடந்த ஃபானி புயல் அப்படியே தீவிரப் புயலாக வலுவிழந்து நள்ளிரவு 12.30 மணியளவில் மேற்கு வங்கத்தை சூறையாடத் தொடங்கியது.

YouTube video thumbnail

கன மழையுடன், சூறாவளிக் காற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைக் கடந்து சென்றது. அப்போது மணிக்கு 70 - 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. 

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததால் உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

மேலும் இது வடக்கு வடகிழக்காக நகர்ந்து இன்று மதியத்துக்கு மேல் வங்கதேசத்தை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக ஃபானி புயல் வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

கராக்பூரில் 95 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஃபானி புயல் கடக்கும் பாதையில் இன்று அதிகாலை முதலே கன மழை பெய்து வருகிறது. இன்று மாலைக்குப் பிறகு நிலைமை சற்று சீரடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.