சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மேற்கு வங்கத்தை நள்ளிரவில் தாக்கிய ஃபானி புயல்: இன்று மாலை வங்கதேசத்தை அடையும் (விடியோ)

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இரண்டு நாட்களாக சின்னாபின்னமாக்கி வரும் ஃபானி புயல் நேற்று நள்ளிரவில் மேற்கு வங்கத்தை தாக்கியது.

News image
Updated On :4 மே 2019, 6:47 am


கொல்கத்தா: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இரண்டு நாட்களாக சின்னாபின்னமாக்கி வரும் ஃபானி புயல் நேற்று நள்ளிரவில் மேற்கு வங்கத்தை தாக்கியது.

நேற்று காலை ஒடிஸாவில் மிகப் பயங்கர காற்றுடன் கரையைக் கடந்த ஃபானி புயல் அப்படியே தீவிரப் புயலாக வலுவிழந்து நள்ளிரவு 12.30 மணியளவில் மேற்கு வங்கத்தை சூறையாடத் தொடங்கியது.

கன மழையுடன், சூறாவளிக் காற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைக் கடந்து சென்றது. அப்போது மணிக்கு 70 - 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. 

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததால் உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

மேலும் இது வடக்கு வடகிழக்காக நகர்ந்து இன்று மதியத்துக்கு மேல் வங்கதேசத்தை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக ஃபானி புயல் வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

கராக்பூரில் 95 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஃபானி புயல் கடக்கும் பாதையில் இன்று அதிகாலை முதலே கன மழை பெய்து வருகிறது. இன்று மாலைக்குப் பிறகு நிலைமை சற்று சீரடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.