அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஒடிஸாவில் நாளை பிற்பகலில் கரையை கடக்கும் ஃபானி புயல்: அதிகாரிகளுக்கு விடுமுறை ரத்து!

உச்ச உயர் தீவிர புயலாக உருமாறியிருக்கும் ஃபானி புயல் ஒடிஸாவில் நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:48 am

ENS


புவனேஸ்வர்: உச்ச உயர் தீவிர புயலாக உருமாறியிருக்கும் ஃபானி புயல் ஒடிஸாவில் நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் வடக்கு - வடகிழக்காக நகர்ந்து ஒடிஸா மாநிலம் புரி அருகே கோபால்புர் - சந்த்பாலிக்கு இடையே நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்றும் அப்போது காற்றின் வேகம் மணிக்கு 170 - 180 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும், அவ்வப்போது இது 200 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து 14 கடற்கரை மாவட்டங்கள் உச்சகட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கடற்கரையோர மாவட்டங்களில் இருக்கும் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

28 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் ஒடிஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கியப் பிறகு மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர் உதவியும் கோரப்பட்டுள்ளது.

புரியில் இருந்து 570 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கும் ஃபானி புயலால், ஒடிசாவின் தெற்குக் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கன மழை முதல் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 4ம் தேதியும் பல்வேறு பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும் என்றும் மே 2ம் தேதி கஜபதி, புரி, குர்தா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மே 3ம் தேதி 25 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எனப்படும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காற்றால் பறக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது, மரக்கிளைகளை வெட்டுவது போன்ற பணிகளும் நடந்து வருகின்றன.

தனியார் வானிலை ஆய்வாளர்கள் அளித்திருக்கும் தகவலில், மேற்கு வங்கத்தைக் கடக்கும்போதே ஃபானி புயல் வலுவிழந்துவிடும் என்று கூறியுள்ளது சற்று ஆறுதலை அளித்துள்ளது.

இதற்கிடையே மீட்புப் பணிகளுக்காக சுகாதாரத் துறை மற்றும் மருத்துவத் துறையினருக்கு அடுத்த 15 நாட்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதாவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.