அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

இனி ராம்பூரில் கொண்டாட்டம்தான்: நடிகை ஜெயப்பிரதா குறித்த சமாஜ்வாதி தலைவர் பேச்சால் வெடித்த சர்ச்சை 

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் பாஜக சார்பாக போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா குறித்த சமாஜ்வாதி தலைவர் ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:29 am

ANI

சம்பால்: உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் பாஜக சார்பாக போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா குறித்த சமாஜ்வாதி தலைவர் ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான ஜெயப்பிரதா 1994-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.  பின்னர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து விலகினார். பின்னர் சமாஜ்வாதிக்கட்சியில் சேர்ந்த அவர், உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் அக்கட்சி சார்பாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2010 -ஆம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்த அவர் தற்போது கடந்த செவ்வாயன்று பாஜ கட்சியில் சேர்ந்தார். உடனடியாக அவருக்கு மீண்டும் ராம்பூர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. அவரை எதிர்த்து சமாஜ்வாதிக் கட்சியின் சார்பாக முக்கியத் தலைவரான ஆஸம் கான் போட்டியிடுகிறார்.

இந்நிலையில்  நடிகை ஜெயப்பிரதா குறித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் பெரோஸ் கானின்  பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.    

வியாழனன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இனி ராம்பூரில் மாலைப் பொழுதுகள் கொண்டாட்டமாக இருக்கும். ராம்பூர் தொகுதி மக்களுக்கு ஆசம் கான் நிறைய செய்துள்ளார்.  எனவே அவரை கண்டிப்பாக வெற்றி பெறச் செய்து விடுவார்கள். ஆனால் எப்போதாவது கிடைக்க கூடிய இம்மாதிரியான வாய்ப்புகளை அவர்கள் தவற விட மாட்டார்கள். 

இவ்வாறு நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுவதால் அத்தொகுதி மக்களுக்கு இனி மாலைப் பொழுதுகள் இனிமையாக கழியும் என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இந்த பேச்சுக்கு விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.