கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

காப்பி அடிப்பதற்குக் கூட புத்திசாலித்தனம் வேண்டும்: யாரைச் சொல்கிறார் யோகி ஆதித்யநாத்

ஒருவர் செய்வதைப் பார்த்து அப்படியே காப்பி அடிப்பதாக இருந்தால் கூட அதற்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :27 மார்ச் 2019, 5:56 am


அகமதாபாத்: ஒருவர் செய்வதைப் பார்த்து அப்படியே காப்பி அடிப்பதாக இருந்தால் கூட அதற்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சோம்நாத் கோயிலுக்கு வருகை தந்தது குறித்து கிண்டலாகப் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமீபத்தில் சோம்நாத் கோயிலுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கே நமாஸ் செய்வதைப் போல அமர்ந்திருந்தார். இது கோயில், காலை மடக்கி உட்காருங்கள் என்று கோயில் பூசாரி ராகுல் காந்தியிடம் கூறிய பிறகே அவர் சரியாக அமர்ந்தார்.

ஒருவரைப் பார்த்து காப்பி அடிப்பதாக இருந்தால் கூட அதற்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமுறையினர் தேர்தல் நேரத்தில்தான் கோயிலுக்குச் செல்வார்கள். மற்ற நேரங்களில் எல்லாம் அவர்களுக்குக் கோயிலுக்குச் செல்ல நேரம் கிடைப்பதில்லை என்று ராகுல் மற்றும் பிரியங்காவின் சுவாமி தரிசனம் குறித்து யோகி ஆதித்யநாத் கிண்டலடித்துள்ளார்.

ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை மக்களவைத்  தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.