கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மிஷன் சக்தி வெற்றி; இந்தியா புதிய சாதனை: மோடி சொல்ல வந்த முக்கியத் தகவல் இதுவே!

மிஷன் சக்தி என்ற பெயரில், விண்ணில் இருந்த ஒரு செயற்கைக் கோளை இந்தியாவின் ஆயுதம் இன்று தாக்கி அழித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 மார்ச் 2019, 9:07 am


புது தில்லி: மிஷன் சக்தி என்ற பெயரில், விண்ணில் இருந்த ஒரு செயற்கைக் கோளை இந்தியாவின் ஆயுதம் இன்று தாக்கி அழித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

மோடியின் உரை தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

அப்போது மோடி கூறியதாவது, மிஷன் சக்தி என்ற  பெயரில் விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு இன்று மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்கிற பெருமையை இன்று இந்தியா எட்டியுள்ளது.

இது, இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

நமது நாட்டின் செயற்கைக் கோளை அழிக்கும் முயற்சியைத் தடுக்கும் வகையில், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெறும் 3 நிமிடங்களில் விண்வெளியில் இருந்த செயற்கைக் கோள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்று மோடி பெருமிதத்துடன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.