குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விரைவில் பெங்களூருச் சாலைகள் இருளில் மூழ்கும் அபாயம்

பெங்களூரு மின்சார வாரியத்தில் சாலை மின் விளக்குகளை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:23 am

ENS


பெங்களூரு: பெங்களூரு மின்சார வாரியத்தில் சாலை மின் விளக்குகளை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

கடந்த 15 மாதங்களாக வழங்கப்பட வேண்டிய ஒப்பந்தப் பணம் ரூ.32 கோடி நிலுவையில் இருப்பதைக் கண்டித்தும், உடனடியாக பணத்தை வழங்கக் கோரியும் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

இதே பிரச்னைக்காக, பெங்களூரு மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணியாளர்களும், கழிவுநீர் வடிகால்வாயை பராமரிக்கும் தொழிலாளர்களும் கூட காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

இன்னும் ஒரு வார காலத்துக்குள் நிலுவைத் தொகை வராவிட்டால், கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும். தெரு விளக்குகளை எரியவிட மாட்டோம். ஒரு வருடத்துக்கும் மேலாக நிலுவைத் தொகையைக் கேட்டு வருகிறோம் என்று தொழிலாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் 4.7 லட்சம் தெரு விளக்குகள் உள்ளன. இதனை பராமரிக்க 120 ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு அதற்காக ரூ.26 கோடி பணம் ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.