கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் ஹார்திக் படேல்

குஜராத் நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் முன்னிலையில் அக்கட்சியில் ஹார்திக் படேல் இணைந்தார். 

News image
Updated On :12 மார்ச் 2019, 12:40 pm

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், குஜராத் நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் முன்னிலையில் அக்கட்சியில் ஹார்திக் படேல் இணைந்தார். 

இதுகுறித்து ஹார்திக் படேல் கூறுகையில், நாட்டுக்கும், சமூகத்துக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்துக்கு வடிவம் கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியில் ராகுல், மூத்த தலைவர்கள் முன்னிலையில் சேர்ந்துள்ளேன். 125 கோடி மக்களுக்கு சேவை செய்யவே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். 

இந்தியாவை வலுப்படுத்தும் பணியை செய்து வந்த காங்கிரஸ் கட்சியில் நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோருக்கு அடுத்து ராகுல் திறம்பட செயல்படுகிறார். வருகிற மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடும் தொகுதி குறித்து காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.