எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஊழல் மோடி மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: ராகுல் தாக்கு

ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி உடனிடயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:19 am

ANI

ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி உடனிடயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார். இதுதொடர்பாக தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் பேசியதாவது:

ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த ஆவணங்கள் உண்மைதன்மை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது பிரதமர் மோடி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அதேவேளையில் தன் மீது தவறில்லை என்றால் பிரதமரும் அந்த விசாரணையில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ரஃபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? இந்த வழக்கில் பிரதமர் மோடி தவறு செய்தது நிரூபிக்கும் வகையிலான உண்மை ஆதாரங்கள் உள்ளன. எனவே அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். 

ஏனென்றால் இந்த மொத்த ஊழலில் தொடக்கமும், முடிவும் பிரதமர் மோடி தான். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த ஆவணங்களை அழிக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ஊழல் மோடி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.