ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஊழல் மோடி மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: ராகுல் தாக்கு

ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி உடனிடயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார். 

News image
Updated On :7 மார்ச் 2019, 10:40 am

ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி உடனிடயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார். இதுதொடர்பாக தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் பேசியதாவது:

ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த ஆவணங்கள் உண்மைதன்மை கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது பிரதமர் மோடி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அதேவேளையில் தன் மீது தவறில்லை என்றால் பிரதமரும் அந்த விசாரணையில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ரஃபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? இந்த வழக்கில் பிரதமர் மோடி தவறு செய்தது நிரூபிக்கும் வகையிலான உண்மை ஆதாரங்கள் உள்ளன. எனவே அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். 

ஏனென்றால் இந்த மொத்த ஊழலில் தொடக்கமும், முடிவும் பிரதமர் மோடி தான். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த ஆவணங்களை அழிக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ஊழல் மோடி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.