எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை மட்டுமே விரும்புகிறது, பயங்கரவாதத்தை அல்ல: வெங்கய்ய நாயுடு

பாரகுவேவில் உள்ள இந்திய சமூக மக்கள் முன் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை உரையாற்றினார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:19 am

ANI

பாரகுவேவில் உள்ள இந்திய சமூக மக்கள் முன் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பயங்கரவாதம் மனித குலத்துக்கு எதிரானது, அதற்கு மதம் கிடையாது. பயங்கரவாதம் மிகவும் ஆபத்தானது. எனவே பயங்கரவாதம் உலகளவில் அழிக்கப்பட வேண்டியது. அதற்கு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக போராட எந்த தயவும் தேவையில்லை, ஏனென்றால் நாட்டிலுள்ள பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவால் நிச்சயம் முடியும். சமீபத்தில் கூட சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை பாகிஸ்தானையோ அல்லது பாகிஸ்தான் மக்கள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை. பயங்கரவாதிகளை மட்டுமே அழித்துள்ளது.

ஆனால், தற்போது இதன் நம்பகத்தன்மை குறித்து உள்நாட்டிலேயே விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர்களைப் பொறுத்தவரையில் இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் முக்கியம். இதில் யாருக்காவது சந்தேகமிருந்தால், அவர்கள் நேரடியாகவே பாகிஸ்தானுக்கு சென்று சோதனை மேற்கொண்டு, அந்நாட்டு அரசிடம் விசாரணை நடத்தட்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா, நமது அண்டை நாடுகள் உட்பட அனைவருடனும் நல்லுறவை மட்டும் தான் விரும்புகிறது, பயங்கரவாதத்தை அல்ல. நம்மால் நண்பர்களை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், அக்கம்பக்கத்தினரை மாற்ற இயலாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயி கூட தெரிவித்துள்ளார். எனவே அதை மனதில் வைத்து தான் இந்தியா செயல்படுகிறது.

நமது அக்கம்பக்கத்தில் உள்ள ஒருவர், பயங்கரவாதத்தை தனது உள்நாட்டு கொள்கையாக கொண்டுள்ளார். அவர்கள் பயங்கரவாதம் வளர அனைத்து சலுகைகளையும், வசதிகளையும் செய்து கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் ஒருபோதும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தியதில்லை என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.