எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்த பாஜக தலித் பெண் எம்.பி 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உத்தர பிரதேச மாநில பாஜக தலித் பெண் எம்.பி ஒருவர் தன்னை காங்கிரசில் இணைதுக் கொண்டுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:17 am

ANI

லக்னௌ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உத்தர பிரதேச மாநில பாஜக தலித் பெண் எம்.பி ஒருவர் தன்னை காங்கிரசில் இணைதுக் கொண்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பஹாரியாச் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாவித்ரி புலே. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவர் பாஜக தலைமையைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

தலித் சமூகத்தைக் சேர்ந்தவரான இவர் பாஜகவில் தலித்துகளுக்கு மதிப்பில்லை, என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், கட்சித் தலைமையின் மீது அதிருப்தி அடைந்த சாவித்ரி புலே காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமையன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

அதேபோல கடந்த 2009-ம் ஆண்டு பதேபூர் தொகுதியின் எம்.பி.யாக இருந்த ராகேஷ் சச்சனும் தற்போது காங்கிரஸ்  கட்சியில் இணைந்தார். இவர் முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் ஆகிய இருவர் அரசிலும் எம்.எல்ஏ.வாக இருந்தவர்.

பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ்வாதிக் கட்சி தற்போது கூட்டணி அமைந்துள்ளது. பதேபூர் தொகுதி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த ராகேஷ் சனியன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

இவர்கள் இருவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச கிழக்குப் பகுதி  காங்கிரஸ் பொதுச் செயலாளாரான பிரியங்கா காந்தி ஆகிய இருவர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

உ.பி.யில் கிழக்குப் பகுதியில் பாஜக மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகளைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அந்த கட்சிக்கு வலுவூட்டுவதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.