பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன்: மாயமானதாகக் கதைக்கட்டப்பட்ட தேஜஸ்வி யாதவ் டிவீட்

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் பல்வேறுக் கட்டுக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அவரே தனது இருப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :29 ஜூன் 2019, 9:38 am


பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் பல்வேறுக் கட்டுக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அவரே தனது இருப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிகார் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி பங்கேற்கவில்லை. 

இதனால், அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வியும், மாயமாகிவிட்டதாக விமரிசனங்களும் எழுந்தன.

இந்த நிலையில், தேஜஸ்வி வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், நண்பர்களே, கடந்த சில நாட்களாக நான் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் நான் மாயமாகவிட்டதாகக் கூறி கிளப்பிய கட்டுக்கதைகளால் ஆச்சரியம் அடைந்தேன். சில ஊடகங்களும் இது தொடர்பாக சுவாரஸ்யக் கதைகளை வெளியிட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி, மே 29ம் தேதிக்குப் பிறகு எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.