திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஆணவக் கொலையின் உச்சபட்சம்: பச்சிளம் தாயை மருத்துவமனையில் இருந்து கடத்திக் கொன்ற பெற்றோர்

வேறு ஜாதியைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து, குழந்தை பெற்ற பச்சிளம் தாயை, அவரது பெற்றோரே கடத்திக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:23 am

ENS


திருப்பதி: வேறு ஜாதியைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து, குழந்தை பெற்ற பச்சிளம் தாயை, அவரது பெற்றோரே கடத்திக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டம் உசிரிபெண்டா பகுதியைச் சேர்ந்த பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்த வந்த 23 வயது பெண் ஹேமாவதி, வேறு ஜாதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டும் கேசவலு என்ற இளைஞரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த வாரம் அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து ஹேமாவதியையும், பச்சிளம் குழந்தையையும் கடத்தி வந்த பெண்ணின் பெற்றோர், பச்சிளம் குழந்தையின் தாய் என்றும் பாராமல் அவரை கொலை செய்து கால்வாயில் வீசிவிட்டு, குழந்தையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.

குழந்தை அழுதச் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையையும், ஹேமாவதியின் உடலையும் கைப்பற்றினர். ஹேமாவதியின் பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும், கேசவலுவின் உறவினர்கள், ஹேமாவதி பெற்றோரின் வீட்டை தீயிட்டுக் கொளுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்புதான் குழந்தையைப் பெற்றெடுத்த பச்சிளம் தாய் என்றும் பாராமல், மகளையே பெற்றோர் ஆணவக் கொலை செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.