பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

விவசாயிகளுக்கு இலவச பயிர் காப்பீட்டுத் திட்டம்: அறிவித்தது மேற்கு வங்க அரசு 

மேற்கு வங்க மாநில விவசாயிகளுக்கு இலவச பயிர் காப்பீட்டுத் திட்டம் ஒன்றினை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2019, 1:21 pm

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில விவசாயிகளுக்கு இலவச பயிர் காப்பீட்டுத் திட்டம் ஒன்றினை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்க மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மேற்கு வங்க மாநில அரசானது அக்ரிகல்ச்சுரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்னும் நிறுவனத்துடன் இணைந்து இந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தினை வழங்குகிறது.

இவ்வாண்டு 'காரிஃப்' பருவத்தினை எதிர்கொள்ளக்கூடிய விவசாயிகளை இயற்கை சீரழிவுகளில் இருந்து பாதுகாக்கவும் ,  நிலையற்ற சந்தை மதிப்பு அபாயத்தில் இருபித்து காப்பாற்றவும் இந்த் காப்பீட்டுத் திட்டமானது உதவும்.

இந்த திட்டத்திற்கான ப்ரீமியத்தினை அரசே செலுத்தி விடுவதால் இது முழுக்க இலவசமான ஒரு திட்டமாகும். அத்துடன் இந்த திட்டத்தில் அமன் மற்றும் அஸ் வகை நெல் வகைகள், சணல் மற்றும் சோளம் ஆகிய பயிர் வகைகளுக்கு இது பொருந்தும்.

"பங்ளா சஸ்யா நிவாஸ்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டமானது டார்ஜிலிங், கலிம்போங், கிழக்கு மற்றும் மேற்கு பர்த்வான், கிழக்கு மற்றும் மேற்கு மிதினிபூர், மலடா, ஹூக்ளி, நாடியா, முர்ஷிதாபாத், கூச் பெஹார், பிர்பம், புருலியா, தெற்கு தினாஜ்புர் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு 24 பார்கனாஸ் ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கு பொருந்தும்.

இந்த திட்டத்தின்படி பயிரிடுதல், வளர்ப்பு மற்றும் அறுவடைக்குப் பிறகான காலகட்டம் வரையிலான இழப்புகளுக்கு விவசாயிகள் உரிய முறையில் நிவாரணம் பெறலாம்.

இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.