பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் ரூ. 2636 கோடி இழப்பு: சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு  

முந்தைய ஆட்சிக்காலத்தில் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் ரூ. 2636 கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாக, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.. 

News image
Updated On :26 ஜூன் 2019, 1:24 pm

அமராவதி: முந்தைய ஆட்சிக்காலத்தில் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் ரூ. 2636 கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாக, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முந்தைய தெலுங்கு தேசம் ஆட்சிக்காலத்தில் சூரிய மற்றும் காற்றாலை மின்சார கொள்முதல் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்களின் காரணமாக, அரசுக்கு ரூ. 2636 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகையினை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.      

இந்த மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதால் முதல்வர், மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் துறைசார்ந்த மூத்த அதிகாரிகள அனைவரின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.   

அத்துடன் சந்திரபாபு தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக  அமைச்சரவை துணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு ஊழல் எதிர்ப்பு ஆணையம், குற்ற விசாரணைத் துறை மற்றும்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை உதவும்.

அதேசமயம் சூரிய மற்றும் காற்றாலை மின்சார நிறுவனங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.