பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் இனி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாதாம்! 

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் இனி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாத வகையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2019, 12:37 pm

டெஹ்ராடூன்: இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் இனி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாத வகையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் பஞ்சாயத்து ராஜ் சட்டம் - 2016 (திருத்தம்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டமானது செவ்வாயன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநில சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளினால் கூச்சல் குழப்பம் நிலவிய சூழலில், இந்த சட்டமானது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள மாநில பஞ்சாயத்து தேர்தல்களுக்கு முன்பாக இந்த சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      

இதுதொடர்பாக மாநில அமைச்சர் மதன் கௌஷிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:   

இந்த சட்டமானது குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்துவதுடன், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியையையும் நிர்ணயிக்கிறது. அதேநேரம் ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிப்பதையும் தடை செய்கிறது. இது ஒரு புரட்சிகர சட்டமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

இதுபோன்ற சட்டங்கள் முன்னர் ஒதிஷா மற்றும் ராஜஸ்தானில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.