இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற முக்கிய விவகாரம் குறித்து குறுகிய காலத்தில் ஆலோசனை நடத்துவதால், அந்த விவகாரம் தொடர்பாக எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. இதுகுறித்து அரசியலமைப்பு நிபுணர்கள், தேர்தல் நிபுணர்கள், அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். அப்படியில்லாமல், உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரித்து, அதை அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பி வைத்து, ஆலோசனைகளை பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இதுபோல் செயல்பட்டால், முக்கியமான இந்த விவகாரம் தொடர்பாக தகுந்த ஆலோசனைகளை திரிணமூல் காங்கிரஸ் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.