ஒரே தேசம், ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமான 4 அரசியல் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது.
ஒரே தேசம், ஒரே தேர்தல், நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தின கொண்டாட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு, தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 19) அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் மோடி அழைப்பு விடுத்திருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டிஆர்எஸ் கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், டிடீபி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற முக்கிய விவகாரம் குறித்து குறுகிய காலத்தில் ஆலோசனை நடத்துவதால், அந்த விவகாரம் தொடர்பாக எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. இதுகுறித்து அரசியலமைப்பு நிபுணர்கள், தேர்தல் நிபுணர்கள், அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். அப்படியில்லாமல், உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரித்து, அதை அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பி வைத்து, ஆலோசனைகளை பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இதுபோல் செயல்பட்டால், முக்கியமான இந்த விவகாரம் தொடர்பாக தகுந்த ஆலோசனைகளை திரிணமூல் காங்கிரஸ் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு பதிலாக அவரது மகன் கே.டி.ராமா ராவ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே.கேசவ ராவ் தெரிவித்தார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியிலும், கடந்த வாரம் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்திலும் சந்திரசேகர் ராவ் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார்.
காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தை வரும் 21ஆம் தேதி சந்திரசேகர் ராவ் திறந்துவைக்கவுள்ளார். அதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


