கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பெங்களூரு நகைக் கடை உரிமையாளர் அரபு நாட்டில் தஞ்சம்?

பெங்களூருவில் தற்கொலை செய்துகொள்வதாக ஒலிப்பேழையை வெளியிட்டு ஆபரண மாளிகை உரிமையாளர் தலைமறைவானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:08 am

ENS


பெங்களூருவில் தற்கொலை செய்துகொள்வதாக ஒலிப்பேழையை வெளியிட்டு ஆபரண மாளிகை உரிமையாளர் தலைமறைவானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு சிவாஜிநகர், ஜெயநகரில் தனியார் ஆபரண மாளிகை நடத்தி வருபவர் மன்சூர்கான். இவர் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக, மாநகர காவல் ஆணையருக்கு ஒலிப்பேழையை அனுப்பி வைத்துவிட்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. 

அதே சமயம், பெங்களூரு காவல்துறையைச் சேர்ந்த அடையாளம் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் அளித்திருக்கும் தகவலில், மன்சூர்கான் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஜூன் 8ம் தேதியே தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்தது அவருக்கு எப்படியோ தெரிந்து அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் அவர் கூறினார்.


முனன்தாக மன்சூர் கான் வெளியிட்ட ஆடியோவில் (ஒலிப்பேழை) கூறியிருப்பதாவது:-
 போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக ஆபரண வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நான், இதனால் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாக நேர்ந்தது. என்னை நம்பிய பலர், ஆபரண மாளிகையில் முதலீடு செய்துள்ளனர். அரசியல்வாதிகள் கொடுக்கும் தொந்தரவால்,  நான் வாழ்ந்தது போதுமென்றாகியுள்ளது. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன்'  என தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் போராட்டம்: இதையறிந்த வாடிக்கையாளர்கள் ஆபரண மாளிகைகளின் முன்பு திங்கள்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது,  தங்களின் முதலீட்டை திரும்பப் பெற்றுதருமாறு வாடிக்கையாளர்கள் போலீஸாரிடம் வலியுறுத்தி புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில், ஒலிப்பேழையில் சிவாஜிநகர் எம்எல்ஏ ரோஷன் பெய்க்கின் பெயரை குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் பரவின. இதை ரோஷன்பெய்க் மறுத்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.