திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக ஓடும் ரயிலில் மசாஜ் வசதி

இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக ஓடும் ரயிலில், ரயில் பயணிகளுக்கு மசாஜ் வசதி செய்து தர திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூன் 2019, 10:02 am


புது தில்லி: இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக ஓடும் ரயிலில், ரயில் பயணிகளுக்கு மசாஜ் வசதி செய்து தர திட்டமிட்டுள்ளது.

இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ரயில்வேயின் ரட்லம் மண்டலத்தில் இருந்து இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் வரலாற்றிலேயே இதுபோன்ற சேவை வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் ரயில்வேயின் வருவாய் பெருகுவதோடு, பயணிகளும் அதிகரிப்பார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. தலை மற்றும் கால்களுக்கு மசாஜ் செய்ய தலா ரூ.100 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயின் வருவாயைப் பெருக்க புதிய திட்டங்களையும், முன் முயற்சிகளையும் பரிசோதிக்கும் வகையில் இந்த மசாஜ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.